29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

மேல் மாகாணத்தில் 5,11,13ஆம் தரங்களிற்கு திங்கள் முதல் பாடசாலை ஆரம்பம்!

மேல் மாகாணத்தில் 5, 11 மற்றும் 13ஆம் தர மாணவர்களிற்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஒப்புதல் அளித்துள்ளார்.

இருப்பினும், பிற தரங்களில் உள்ள மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் திங்களன்று மீண்டும் தொடங்கப்படாது.

மேல் மாகாணத்தைத் தவிர்த்து நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் மார்ச் 15 திங்கள் அன்று அனைத்து தரங்களுக்கும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நேற்று அறிவித்தார்.

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து மேலும் விவாதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேல் மாகாணத்தில் பாடசாலைகள் கடந்த ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும்  மாணவர்களுக்கு மட்டுமே கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஞானசாரர் வைத்தியசாலையில்

Pagetamil

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

Leave a Comment