பூசகர் வீட்டுக்கு பெற்றோல் குண்டுவீச்சு!

Date:

வவுனியா புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள பூசகர் வீடொன்றிற்கு இன்று அதிகாலை 2 மணியளவில் சென்ற இனம் தெரியாத நபர்கள் அங்கு பெற்றோல் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் வீட்டின் கதவு சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்