வவுனியா புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள பூசகர் வீடொன்றிற்கு இன்று அதிகாலை 2 மணியளவில் சென்ற இனம் தெரியாத நபர்கள் அங்கு பெற்றோல் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் வீட்டின் கதவு சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




