3வது ரி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்!

Date:

இலங்கைக்கு எதிரான 3வது ரி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாத்தில் வெற்றியீட்டிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, 2-1 என தொடரை வென்றது.

இன்று கூலிட்ஜ் மைதானத்தில் நடந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இலங்கையின் பெரும்பாலான வீரர்கள் மந்தமாக ஆடியதுடன், சொற்ப ஓட்டங்களையே பெற்றனர். தொடக்க வீரர்கள் தனுஷ்க குணதிலக 9, பதும் நிஷங்க 5, நிரோஷன் டிக்வெல்ல 4, மத்யூஸ் 11 பெற்றனர். ஆட்டமிழக்காமல் சந்திமல் 46 பந்துகளில் 54 ஓட்டங்களையும், அசேன் பண்டார 35 பந்துகளில் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டத்தை இலங்கை பெற்றது.

பதிலளித்தாடிய மேற்கிந்தியத்தீவுகள், 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது.

லென்டி சிமென் 26, நிக்கோலஸ் பூரான் 23 ஓட்டங்களை பெற்றனர்.

லக்ஸன் சந்தகன் 29 ஓட்டங்களிற்கு 3 விக்கெட், துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அகில தனஞ்ஜய 4 ஓவர்களில் 53 ஓட்டங்கள் சாத்துப்படி வாங்கினார்.

ஆட்டநாயகன் மேற்கிந்தியத்தீவுகளின் பவியன் அலென்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்