Pagetamil
குற்றம்

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 7 பேர் கைது!

வவுனியாவில் மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி காமினி திசாநாயக்க தெரிவித்தார்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினரால் நகரப்பகுதிகளில் நேற்று விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துதல், மற்றும் வீதி ஒழுங்குகளை பேணாமல் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அந்தவகையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 பேர்பொலிசாரால்கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்த பின் இளம்பெண்ணுக்கு மற்றொரு காதல்: தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று காதலன் வெறிச்செயல்!

Pagetamil

11 வயது சிறுமியை குதறிய 75 வயது காமுகத் தாத்தா!

Pagetamil

தந்தையை அடித்துக் கொன்ற மகன்

Pagetamil

யாழில் வில்லங்க சம்பவம்: பிரான்ஸ் மாப்பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற ஜிம் சென்ற யுவதி… மாஸ்டருன் எஸ்கேப்; பேஸ்புக்கில் பகிரப்படும் அந்தரங்க படங்கள்!

Pagetamil

25 வயது யுவதிக்கு நடு வீதியில் பயங்கரம்: மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment