மூதாட்டியை கட்டி வைத்து விட்டு சகோதரனின் முன்னிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி!

Date:

73 வயதான வயோதிப் பெண்ணின் கைகால்களைக் கட்டி வைத்துவிட்டு, 12 வயது சகோதரனின் முன்னிலையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி  சம்பவமொன்று விலச்சிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர் 40 வயதுடைய திருமணமானவர்.

கடந்த 4ஆம் திகதி வயதான பெண்ணின் வீட்டிற்கு சென்ற சந்தேகநபர்,  அவரது கால்களையும் கைகளையும் கட்டியுள்ளார். பின்னர் 13 வயது சிறுமியையும், அவரது 12 வயது சகோதரரையும் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, கதவை மூடி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சிறுவனின் முன்னிலையிலேயே சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

வயோதிபப்பெண்ணின் மகளை திருமணம் முடித்தவரே இந்த கொடூரத்தில் ஈடுபட்டார்.

சிறுமியும், மூதாட்டியும் இது குறித்து விலாச்சிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்