சிகிரியாவில் கிரிக்கெட் வீரர் முறையற்ற விதத்தில் காணி பிடிப்பு!

Date:

சிகிரிய பகுதியில் பெறுமதிமிக்க காணிகளை கிரிக்கெட் வீரர் ஒருவர் வாங்கிய விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அத்துடன், இதுவரை வழங்கப்பட்ட பத்திரங்களை உடனடியாக இரத்து செய்யுங்கள் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (05) நடைபெற்ற மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த உத்தரவுகளை வழங்கினார்.

இது மிகவும் மோசமான செயல். குறைந்த வருமானம் உடையவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலங்களை இந்த முறையில் தவறாகப் பயன்படுத்தப்படுவது ஒரு மோசமான சூழ்நிலை. சம்பந்தப்பட்ட நிலங்களை வழங்கும் செயல்களை ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாகாணத்திலும், மாத்தளை மாவட்டத்திலும் நிலமற்ற மக்களுக்கு நிலங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ஆளுநர் வலியுறுத்தினார்.

சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும், தொடர்புடைய கிராமசேவகர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.

கிராமசேவகரின் பிள்ளையை கண்டியிலுள்ள பிரபலமான பாடசாலையில் சேர்க்க கிரிக்கெட் வீரர் நடவடிக்கையெடுத்ததாக தகவல் கிடைத்துள்ளதாக ஆளுனர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...

கசிப்பு வியாபாரி கைது!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் சட்டவிரோத நீண்ட...

மட்டக்களப்பில் ‘சரக்கு’ விற்ற பெண் கைது!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்