கிளிநொச்சியில் குரங்குகளிற்கு உணவளிக்கும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்!

Date:

கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கருகில் போதியளவு உணவின்றி காணப்படும்
குரங்களுக்கு நாளாந்தம் தனது வசதிகேற்ப உணவுகளை வழங்கி வருகின்றார்
கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு.தர்மராஜா என்பவர்.

போதியளவு உணவின்றி குடிமமனைகளுக்குள் புகுந்து பயிர்களுக்கும் பயன்தரும்
பழ மரங்களுக்கும் சேதம் விளைவித்த வந்த குரங்களுக்கு அவற்றின்
இருப்பிடமான இரணைமடு குளத்தின் வான்பகுதிக்கு அருகில் சென்று உணவுகளை
வழங்கி வருகின்றார்.

நாளாந்தம் தனது வசதிகேற்ப வாழைப்பழம்,பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை வழங்கி
வரும் தர்மராஜா தான் வழங்கும் உணவுகள் அவைகளுக்கு போதுமானதாக இல்லை
எனவும் தன்னால் தனியே அங்குள்ள அனைத்து குரங்களுக்கும் உணவளிக்க
முடியாதுள்ளது என்றும் தெரிவிக்கும் அவர் வசதிபடைத்தவர்களும் இப் பணியில்
இணைந்து கொண்டால் மகிழ்ச்சி அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அங்குள்ள குரங்குகள் நாளாந்தம் தனது வருகைக்காக
காத்திருப்பதாகவும் தான் உணவுடன் சென்றால் சகஜமாக அருகில் வந்து உணவுகளை
பெற்றுச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இச் செயற்பாடு
மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்