இராணுவத்திற்கு காணி கொடுப்பதற்கு எதிராக பச்சிலைப்பள்ளியில் தீர்மானம்!

Date:

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட முகவில் கிராம அலுவலர் பிரிவின் பீ பற்று பகுதியில் பதினாறு குடும்பங்களுக்கு சொந்தமான முப்பதாறு ஏக்கர் காணிகளை இராணுவம் பிடித்து வைத்திருக்கின்றது. இந்த காணிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று பி.ப 2.00 மணியளவில் பளை பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் தலைமையில் ஆரம்பமாகியது.

இங்கு கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்த தீர்மானத்தை சபையில் கொண்டுவரும் போது ஒருங்கிணைப்பு குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தா எதிர்ப்பு தெரிவித்து குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பயனில்லை எனவும் இது தொடர்பாக பேசி முடிவெடுக்கலாம் எனவும் விடாப்பிடியாக நின்றார்.

ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன் மற்றும் கஜேந்திரன் பச்சிலைப்பள்ளி தவிசாளர் சு.சுரேன் ஆகியோர் குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என குறியாக நின்றதால் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்