Pagetamil
உலகம்

ரஷ்யாவில் 60% பேர் ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள விரும்பவில்லை!

ரஷ்யாவில் சுமார் 60வீதமானவர்கள் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள விரும்பவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படுகிறது என பல்வேறு நாடுகளுக்கு ரஷ்யா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள 60% ரஷ்யர்கள் விரும்பவில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லிவேடா மையம் நடத்திய ஆய்வில், சுமார் 60% ரஷ்யர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள விரும்பவில்லை. காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படுவதால் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள தயங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரஷ்யாவில் 35 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். டிசம்பர் மற்றும் ஜனவரியை ஒப்பிடுகையில் பாதிப்பு குறைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இலங்கை இன்று அனுமதியளித்துள்ளது. அடுத்த வாரம் இலங்கைக்கு முதற் தொகுதி ஸ்புட்னிக் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

ரஷ்யா – உக்ரைன் அமைதி முயற்சியில் உடனடி முன்னேற்றம் இல்லையெனில் ட்ரம்ப் விலகிவிடுவார்!

Pagetamil

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மதிக்கவில்லை!

Pagetamil

ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கும் இஸ்ரேல் திட்டத்தை தடுத்த டிரம்ப்!

Pagetamil

மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர்

Pagetamil

ஈரானுடான இராஜதந்திர முயற்சி தோல்வியடைந்தால் இராணுவம் பயன்படுத்தப்படும்!

Pagetamil

Leave a Comment