கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (04) அறிவித்துள்ளார்.
இதன்மூலம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 489 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட மரணய்களின் விபரம்-
உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த, 53 வயதான பெண் ஒருவர், மாவனல்லை வைத்தியசாலையிலிருந்து கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு மற்றும் கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவ பீட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (04) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை மற்றும் அவையவங்கள் செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 02ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், இருதய நோய் நிலை, கொவிட்-19 நிமோனியா நிலை மற்றும் உக்கிர சிறுநீரக சிதைவடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த, 62 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த திங்கட்கிழமை (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று நிலை மற்றும் சுவாசத் தொகுதி செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான பெண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (03) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு அதிர்ச்சி, கொவிட்-19 நிமோனியா நிலை உக்கிர சிறுநீரக சிதைவடைவு மற்றும் புற்றுநோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.