நாட்டில் இன்று 335 பேர் COVID-19 தொற்றடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 84,205 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 66 வைத்தியசாலைகளில் 3,284 பேர் COVID-19 வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
COVID-19 வைரஸிலிருந்த குணமடைந்த 417 பேர் இன்று வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,437 ஆக உயர்ந்தது.
வைரஸ் தொற்று சந்தேகத்தில் 527 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.