மாஸ்டர் பவானியாக நடிக்க முடியவில்லை என கவலைப்படும் நடிகர்

Date:

படத்தில் வில்லன் காதாப்பாத்திரமே கவர்ந்தது

படத்தை பார்த்த அனைவரையும் கவர்ந்தவர் வில்லன் பவானி தான். முன்னதாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல் வெளியானபோது இவருக்கு ஏதாவது ஆகிட்டா என்று ரசிகர்கள் கேட்டனர். படத்தை பார்த்த பிறகே விஜய் சேதுபதி ஏன் வில்லனாக மாறினார் என்பது புரிந்தது.

விஜய் தான் ஹீரோ என்றாலும் மாஸ்டர் விஜய் சேதுபதி படம் என்று விமர்சனம் எழுந்தது. வில்லன் கதாபாத்திரத்தை பார்த்துப் பார்த்து உருவாக்கிய லோகேஷ், ஹீரோவுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த பவானி கதாபாத்திரத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என்று ஆர்.கே. சுரேஷ் ஃபீல் செய்திருக்கிறார். தயாரிப்பாளராக தமிழ் திரையுலகிற்கு வந்த ஆர்.கே. சுரேஷ் பின்னர் நடிகர் ஆனார். வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் ஹீரோவாகிவிட்டார். அவர் ஹீரோவாக நடித்த வேட்டை நாய் படம் கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.

பவானி கதாபாத்திரம் குறித்து ஆர்.கே. சுரேஷ் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

நான் வில்லனாக நடிப்பதை மிஸ் பண்ணுகிறேன். அதிலும் குறிப்பாக மாஸ்டர் படத்தில் வந்த பவானி கதாபாத்திரத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தமாக உள்ளது.

அந்த கதாபாத்திரத்தில் நடிக்குமாறு யாரும் என்னை அணுகவில்லை. இருந்தாலும் பவானியை மிஸ் பண்ணிவிட்டோமே என்று தூக்கமே வரவில்லை. அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பொருத்தமானது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்