வவுனியா விபத்தில் ஒருவர் பலி!

Date:

வவுனியா இலுப்பையடி பகுதியில் இன்று (2) காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சாவடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

இலுப்பையடிப் பகுதியில் நின்றிருந்த முதியவர் வீதியை கடக்க முற்பட்ட போது பூந்தோட்டம் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் முதியவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்த முச்சக்கரவண்டி சாரதிகளால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பயனின்றி சாவடைந்துள்ளார்.

சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (56) என்ற முதியவரே சாவடைந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்