29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

தொற்று எண்ணிக்கை 83,000ஐ கடந்தது!

COVID-19  தொற்றிற்குள்ளான மேலும் 352 பேர் நேற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,242 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 346 பேர் மினுவாங்கொட- பேலியகோடா COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து நான்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணி 79,089 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 2 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்ப்பட்டனர்.

3,824 பேர் தற்போது நாடு முழுவதும் 64 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த 574 பேர், நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 78,947 ஆக உயர்்துள்ளது. தொற்று சந்தேகத்தில் 401 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment