COVID-19 தொற்றிற்குள்ளான மேலும் 352 பேர் நேற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,242 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 346 பேர் மினுவாங்கொட- பேலியகோடா COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து நான்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணி 79,089 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 2 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்ப்பட்டனர்.
3,824 பேர் தற்போது நாடு முழுவதும் 64 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த 574 பேர், நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 78,947 ஆக உயர்்துள்ளது. தொற்று சந்தேகத்தில் 401 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.