ட்விட்டர் இனி பணம் செலுத்தி தான் பயன்படுத்த வேண்டுமாம்?”

Date:

இதுவரை ட்விட்டரை பயனர்கள் இலவசமாகப் பயன்படுத்தி வந்த நிலையில் புதிதாகப் பணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையிலான ‘Super Follow’ என்னும் வசதியை அறிமுகப்படுத்துவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டது ட்விட்டர் நிறுவனம்.

புதிய வசதியானது குறிப்பிட்ட நபர்களின் ட்விட்டர் (Twitter) கணக்குகளை பின் தொடர்வதற்கும், அவர்கள் பகிரும் பதிவுகளைக் காண்பதற்கும் பயனர்கள் பணம் செலுத்த வேண்டும் என்பது போன்ற நடைமுறையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படைப்பாளிகள் நேரடியாகப் பயனடைவார்கள். ஆனால் இந்த சேவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இது நடைமுறைக்கு வர சில காலம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், பேஸ்புக்கில் இருப்பது போலவே ஒரே தலைப்பில் கலந்துரையாடும் வகையிலான குழுக்கள் போன்ற அமைப்பை ட்விட்டரில் உருவாக்கும் முனைப்பிலும் அந்த நிறுவனம் இருக்கிறது. இதனுடன் மேலும் சில பாதுகாப்பு அம்சங்களும் ட்விட்டரில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 24 மணி நேரத்தில் மறைந்து விடக்கூடிய ‘Fleet’ என்னும் வசதியைச் சென்ற ஆண்டு ட்விட்டர் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்