எமது தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்; ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: சு.க திடீர் அறிவிப்பு!

Date:

இலங்கை சுதந்திரக்கட்சி தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக கைகோர்க்க வேண்டுமென ஜனநாயக சக்திகளையும் தேசபக்தர்களையும் கேட்டுக்கொள்வதாக இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுடன் பேசிய அவர், சில குழுக்கள் சுதந்திரக்கட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சதியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். கடந்த தேர்தலின் பின்னர் இத்தகைய முயற்சிகள் ஆரம்பித்தாக தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பெதுஜன பெரமுன இடையேயான முதல் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுடன் இதுபோன்ற முயற்சிகள் தொடங்கியதாக அவர் குற்றம் சாட்டினார், அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் தேசிய பட்டியல் பதவிகளை வழங்குவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

இலங்கை சுதந்திரக் கட்சி தலைவர்கள் தாக்கப்படுகிறார்கள், கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றவும் தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் – தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்

விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு போலியோ...

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான...

புதிய கடற்படை தளபதியாக தமியன் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ரியர் அட்மிரல் தமியன் பெர்னாண்டோவை இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்