மரணவீட்டில் ரணகளம்: 6 பேர் வைத்தியசாலையில்!

Date:

சிதம்பரபுரம் மதுராநகர் பகுதியில் மரணவீடு ஒன்று நேற்று (27) இடம் பெற்றுள்ளது. குறித்த மரணக்கிரியை நடந்த வீட்டிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (28) அதிகாலை ஒரு மணியளவில் மரணக்கிரியை நடந்த வீட்டில் ஆச்சிபுரம் மற்றும் மதுராநகரை சேர்ந்த இரு பகுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கிடையே ஆரம்பத்தில் ஏற்பட்ட வாய் தகராறு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இச் சம்பவத்தில் 20, 22, 25, 28, 30 ஆகிய வயதினையுடைய ஆச்சிபுரத்தினை சேந்த நால்வரும் மதுரா நகரினை சேர்ந்த இருவரும் காயமடைந்துள்ளார்கள்.

இச் சம்பவம் தொடர்பாக சிதம்பரபுர பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்