மனைவியை கத்தியால் குத்தியதை பார்த்து விட்டு திரும்பிச் சென்ற பொலிஸ்காரர் பணிநீக்கம்!

Date:

கந்தளாயில் பெண்ணொருவர் கணவரால் வீதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட போது, சம்பவ இடத்திற்கு வந்து திரும்பிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடமை தவறிய குற்றச்சாட்டில் அவர் மீது துறை ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் கந்தளாய் பகுதியில், தாதியாக கடமையாற்றும் தனது மனைவியை, சிவில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் நடுவீதியில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்.

மனைவி மீது 35 முறை அவர் கத்திக்குத்து நடத்தினார்.

அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.

நடுவீதியில் கத்திக்குத்து தாக்குதல் நடந்த போது அந்த வீதியினால் வந்த கந்தளாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சம்பவத்தை கண்டதும், வந்த வழியே திரும்பி சென்றிருந்தார்.

அங்கிருந்த சிசிரிவி கமராவில் இந்த காட்சி பதிவாகியிருந்தது.

இதனடிப்படையில், கடமை தவறிய குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை

‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்ட அல்லு அர்ஜுன், அடுத்து...

விமானிகள் கைபேசியில் புகைப்படம் எடுத்ததே விமான விபத்திற்கு காரணம்

சியோலின் தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 2021-ல் இரண்டு தென்...

பிரீமியம் இலக்கத்தகட்டை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிக மதிப்புள்ள வாகனப் பதிவு எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்