27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் பாகிஸ்தான் கடனுதவி!

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடனுதவி அளித்திருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்று திரும்பியிருந்தார். இரண்டு நாள் பயணத்தில் பாகிஸ்தான் – இலங்கை இடையேயான உறவை வலுவாக்குவது குறித்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார் இம்ரான். சில ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரையும் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து ஆலோசித்தார்.

தனது இரண்டாவது நாள் பயணத்தில் இலங்கைக்கு சுமார் 50 மில்லியன் டொலர் கடனுதவிதி அறிவித்திருக்கிறார் இம்ரான் கான்.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் இம்ரான் கான் இலங்கை அரசுக்கு சுமார் 50 மில்லியன் டொலரை கடனாக அறிவித்திருக்கிறார்.

பாதுகாப்பு, பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உளவுத்துறை பகிர்வு தொடர்பான விஷயங்களை கையாள்வதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் வலுவான உறவு தேவை என்பதை இரு தரப்பு அரசுகளும் இச்சந்திப்பில் வலியுறுத்தி உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment