25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

பிரபாகரனை கொன்றேன் என கோட்டா சொன்னதே பெரிய சாட்சியம்; போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கையெடுங்கள்: சிறிதரன் எம்.பி!

பிரபாகரனை நான் கொன்றேன் என்று ஜனாதிபதி கோட்டபாய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம். அதைவைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்க தூதரிடம் தெரிவித்ததாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ்க்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி சிவஞானம் ஆகியோர்க்கிடையில் இன்று காலை 7.00 மணியளவில் தனியார் விடுதி ஒன்றில் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதன்போதே மேற்குறித்த விடயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் இடம் வலியுறுத்தினார்.

குறித்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் குறிப்பிடுகையில்.

ஜெனீவாவில் கொண்டுவரப்பட இருக்கின்ற தீர்மானம் தொடர்பில் மற்றும் அந்த தீர்மானத்திற்கு இருக்கின்ற சவால்கள் அந்த சவால்களை எதிர்கொள்வதற்காக ஒருங்கிணைந்த நாடுகள் எவ்வாறான விடயங்களை எதிர்கொள்கின்றன. அந்த சாவால்களை அவர்கள் எவ்வாறு சாமாளிக்க போகிறார்கள். அதற்கு தமிழர்தரப்பான எங்களுடைய பங்களிப்பு என்ன மற்றும் ஏனையநாடுகளுடன் கலந்துரையாட வேண்டிய விடயங்கள்தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும் இன்று உள்ள களசூழல்கள் தமிழ் மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் இந்த அரசாங்கம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நடந்து முடிந்த பின்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், பொதுமக்கள் போன்றோரை விசாரணை என்ற போர்வையில் அச்சுறுத்தி வருவதையும் நாங்கள் அவருடன் கலந்துரையாடியுள்ளோம்.

அத்துடன் அண்மையில் அம்பாறையில் உகுண பிரதெசத்தில் பிரபாகரனை நான் கொன்றேன் என்று ஜனாதிபதி கோட்டபாய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம். அதைவைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

அண்மையில் உலகத் தமிழர் பேரவை மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதி மையம் நியூயோர்க் பல்கலைக்கழகம் அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம் மற்றும் கனேடிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் ஸ்ரீலங்காவில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த சந்தரப்பத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்

இவ்வாறான விடயங்களை சாட்சியமாக வைத்து நடவடிக்கை எடுக்க முடியும் என அமேரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் இடம் சுட்டிக்காட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment