30.6 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

இன்று மேலும் 5 மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் இன்று (22) அறிவித்க்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-

துனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த, 33 வயதான பெண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (20) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் உக்கிர நீரிழிவு மற்றும் சிறுநீரக தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 82 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12 (புதுக்கடை/வாழைத்தோட்டம்) பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (20) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் குருதி விஷமடைவு மற்றும் சிறுநீரக வழியில் உக்கிர தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான பெண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இருந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக சிதைவடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை/ கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (20) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா உக்கிர நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!