30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

தொண்டமானாறில் கடலில் மூழ்கிய மாணவனின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன், சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு கடலில் இருந்து மீட்கப்பட்டார்.

உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

உடுப்பிட்டி சந்தை பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (17) என்ற சிறுவனே கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அந்த பகுதியைச் சேர்ந்த ஒன்பது நண்பர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment