கொட்டகலையில் ஒரே குடும்பத்தில் பாடசாலை மாணவன் உட்பட 7 பேருக்கு தொற்று!

Date:

ஹட்டன், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள தலவாக்கலை, சென்கிளேர் தோட்டத்தின் டெவோன் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (20) இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் பெப்ரவரி 08 ஆம் திகதி அன்று கம்பஹாவுக்குச் சென்றிருந்தபோது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, அவரது குடும்பம் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

அவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 6 குடும்ப உறுப்பினர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களில் சென்க்ளேர் தமிழ் மகா வித்யாலயாவின் 10 ஆம் ஆண்டு மாணவரும் ஒருவரும் உள்ளடங்குகிறார். மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

கம்பஹாவில் தொற்றிற்குள்ளான பெண்ணுடன், அந்த குடும்பத்தில் 7 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்