25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

செல்வம் அடைக்கலநாதனிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றனர்!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த பொலிஸார் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்ள வருமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரிடம் பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment