ஆசிரியைக்கும், காதலனிற்கும் கொரோனா: அட்டனில் முன்னணி பாடசாலை பூட்டு!

Date:

அட்டன் பகுதியிலுள்ள ஹைலெவல் சர்வதேச பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பாடசாலை இன்று (16) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாடசாலை முழுவதும் தொற்றுநீக்கி தெளித்து, தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காகவே பாடசாலை இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியைக்கும் அவரின் காதலருக்கும் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு நேற்று (15) சென்றுள்ளனர். இங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் அண்மை நாட்கள் வரை பாடசாலைக்கும் சென்றுள்ளார். தரம் 6 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இப்பாடசாலையில் சுமார் ஆயிரம் மாணவர்கள் வரை கல்வி கற்கின்றனர். அதிபர் உட்பட 40 ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

ஐஸ் சர்ச்சை: தெரணியகலவில் நடந்தது என்ன?

அவிசவெல்ல பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட குழு ஒன்று, நேற்று...

அம்பாறை பிசியோதெரப்பிஸ்ட் மரணம் I நான் அவனில்லை பாணியில் பல பெண்களை ஏமாற்றிய பலே கில்லாடி; 3 குழந்தைகள்… வழுக்கைத் தலைக்கு ‘விக்’!

தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகே காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை...

குழந்தையை காருக்குள் விட்டுவிட்டு மறந்துபோய் வேலைக்கு சென்ற தமிழ்ப்பெண்; குழந்தை பலி: ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!

ஜேர்மனியின் ஷோர்ன்டார்ஃபில் (ரெம்ஸ்-மர் மாவட்டம்) புதன்கிழமை அன்று ஒரு காரில் சடலமாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்