கோப்பாய் பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிசார் நாளை வெளியேற்றப்பட்டு காணி கையளிப்பு: நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!

Date:

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளை (15) நீதிமன்றத்தின் மூலம் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், கடந்த 35 வருடங்களாக பொலிசாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ளது. அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டவில்லை.

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான 9 உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு யாழ் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு வெளியானது. பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

எனினும், இதுவரை பொலிசார் காணியை கையளிக்கவில்லை. கோப்பாய் பொலிஸ் நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள் முடிந்துள்ளன. எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை.

இந்த நிலையில், நாளை (15) நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று, அங்குள்ள பொலிசாரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த மத நிறுவன சீர்திருத்த திட்டம்: ஐதேக கொதிப்பு!

தம்ம நீதிமன்றங்களை நிறுவுவது மற்றும் விகார-தேவலகம் சட்டத்தைத் திருத்துவது உள்ளிட்ட, பௌத்த...

போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்கக்கோரும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்

சமீபத்திய எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களில் இடைக்காலத் திருத்தம்...

சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மோசடி மன்​னன் சுகேஷ் சந்​திரசேகர் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் பண மோசடி​யில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்