பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

Date:

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 108வது பிறந்த நாளை முன்னிட்டு, பண்டத்தரிப்பு சாந்தை விநாயகர் கலையரங்கில் பிரமாண்டமான வகையில் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவை மற்றும் எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்கேற்றார். விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர், மங்கல விளக்கு ஏற்றப்பட்டு, எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவப்பட்டது.

பிறந்த நாள் நிகழ்வின் போது, புற்றுநோய், சிறுநீரக நோய், பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன. மேலும், விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு, கலைஞர்களையும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில், யாழ். அரசாங்க அதிபர், எம்.ஜி.ஆர் பேரவையின் உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகத்தினருடன் பல கிராம சேவகர்கள், எம்.ஜி.ஆரின் இரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அளவில் பங்கேகேற்றிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்