கட்டைக்காட்டில் இயேசு சிலையில் நீர் கசிந்த சம்பவம்

Date:

வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள கட்டைக்காடு பகுதியில் இயேசு சிலை ஒன்றிலிருந்து நீர் கசிந்துள்ள அதிசய சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று (28) பிற்பகல், ஆண்டவரின் சிலுவை பகுதியில் நீர் கசிந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக ஆண்டவரின் சிலுவையின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தை அறிந்த பிறகு, பல்வேறு இடங்களிருந்து வந்த மக்கள், ஆண்டவரின் காலில் இருந்து வடிந்த நீரை எடுத்துச் சென்றனர். சகோதர மதத்தினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இந்த அதிசய காட்சியை பார்வையிட்டனர். பலர் அந்த நேரத்தில் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்தவுடன் கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர், அதன் உறுதிப்படுத்தல் செய்யப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது-...

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்