கட்டைக்காட்டில் இயேசு சிலையில் நீர் கசிந்த சம்பவம்

Date:

வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள கட்டைக்காடு பகுதியில் இயேசு சிலை ஒன்றிலிருந்து நீர் கசிந்துள்ள அதிசய சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று (28) பிற்பகல், ஆண்டவரின் சிலுவை பகுதியில் நீர் கசிந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக ஆண்டவரின் சிலுவையின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தை அறிந்த பிறகு, பல்வேறு இடங்களிருந்து வந்த மக்கள், ஆண்டவரின் காலில் இருந்து வடிந்த நீரை எடுத்துச் சென்றனர். சகோதர மதத்தினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இந்த அதிசய காட்சியை பார்வையிட்டனர். பலர் அந்த நேரத்தில் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்தவுடன் கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர், அதன் உறுதிப்படுத்தல் செய்யப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்