ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறும் பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் தீவிரமாக செயற்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடம் திறப்பதற்காக இன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயம் செய்யவுள்ளார்.
இந்த நிலையில், காலை 8.30 மணியளவில் குறித்த விபத்து வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேக கட்டுப்பாட்டை மீறிய ரிப்பர் வாகனம் வீதி ஓரத்தில் வைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.




