குடிவரவு திணைக்களத்துக்குள் சடலம்

Date:

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு திணைக்கள வளாகத்தில் உள்ள நாற்காலியில் இன்று காலை (04) சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

களனி, வேதமுல்ல பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய கருணாரத்ன ஆராச்சிகே தர்மசேன என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் துப்புரவு பிரிவில் பணிபுரிந்தவர் என தெரியவந்துள்ளது.

அதே வளாகத்தின் மேல் தளத்தில் துப்புரவுத் துறைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வசித்து வந்த இவர், இன்று (04) காலை நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பின்னர், தலங்கம மரண விசாரணை அதிகாரி பிரேமலதா அபேவர்தன சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பசுமை எதிர்காலத்தை நோக்கி கல்முனை சாஹிரா மாணவர்களால் உருவாக்கப்பட்ட Bio gas Unit வெற்றிகரமாக திறந்து வைப்பு

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் உயிரியல் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் மாணவர்களின்...

மாளிகா வீதியில் வடிகான் துப்புரவுப் பணி : ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு இணங்க தவிசாளர் பாஸ்கரனின் பணிப்பில் நடவடிக்கை

மாளிகைக்காடு பிரதான பாதையான மாளிகா வீதியில் நீண்டகாலமாக காணப்பட்ட வடிகான் அடைப்புகள்...

செம்மணி

100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்