வில்லுக்குளத்தை உழுதவர்கள் மடக்கிப்பிடிப்பு!

Date:

இறக்காமம் வில்லு குள கிழக்கு கரைக்கு சொந்தமான நிலப் பகுதிகள் மிகவும் சூட்சுமமான முறையில் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளத்தின் உயர்மட்ட எல்லைப் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதோடு கோடை காலத்தில் குளத்தில் நீர் வற்றும்போது குளத்தின் நீர் தேங்கும் பகுதிகளுக்குள் உயரமான வரம்புகள் கட்டப்பட்டு குளத்தின் பகுதிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் பொது மக்கள் இறக்காமம் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தவகையில் குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளுக்குள் எல்லாவிதமான விவசாய நடவடிக்கைகளுக்கும் பிரதேச சபையின் அனுமதி இன்றி செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கட்டளையையும் மீறி செயற்பட்ட உழுவு இயந்திரங்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்;

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்