உலகிலேயே மிக காரமான மிளகாய் இது தானாம்.. எங்கு விளைகிறது தெரியுமா?

Date:

மிளகாய்களில் பல வகைகள் உள்ளது, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், குண்டு மிளகாய், குடை மிளகாய் என பல வகைககள் உள்ளன. இதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அளவிலான காரம் இருக்கும். குடை மிளகாயில் அவ்வளவு காரம் இருக்காது. ஆனால் பச்சை மிளகாயில் நல்ல காரம் இருக்கும். ஆனால் உலகின் காரமான மிளகாய் எது? அது எங்கு பயிர் செய்யப்படுகிறது தெரியுமா?

அமெரிக்காவில் பயிர் செய்யப்படும் கரோலினா ரீப்பர் என்ற மிளகாய் தான் உலகின் காரமான மிளகாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த மிளகாய் பார்ப்பதற்கு குடை மிளகாய் வடிவில் இருந்தாலும் இந்த வகை மிளகாய்க்கு தான் காரம் அதிகம். இதை விட காரமான மிளகாய் இந்த உலகில் வேறு எங்கும் இல்லை.

கரோலினா ரீப்பர்

2012ம் ஆண்டு இந்த மிளகாயை சவுத் கரோலினா பல்கலைகழகத்தில் ஆய்வு செய்தனர். அப்பொழுது இதன் காரத்தன்மையை ஆய்வு செய்ய ஸ்கோவைல் ஹீட் யூனிட் என்ற அளவு கோலை எடுத்துக்கொண்டனர் இந்த மிளகாய் 15,59,300 ஸ்கோவைல் ஹீட் யூனிட் காரத்தை பதிவு செய்தது.

ஸ்கோவைல் ஹீட் யூனிட்

பொதுவாக காரத்தன்மை எல்லாம் இந்த ஸ்கோவைல் ஹீட் யூனிட் முறையில் தான் ஆய்வு செய்யப்படுகிறது. அதிக ஸ்கோவைல் ஹீட் யூனிட் கொண்ட பொருள் அதிக காரத்தன்மை உடையது எனவும், குறைவான ஸ்கோவைல் ஹீட் யூனிட் கொண்டது குறைவான கார தன்மை கொண்டது எனவும் அர்த்தம் கொள்லாம்

சாதாரண மிளகாயின் அளவு

இப்படியாக சாதாரண மிளகாயை ஆய்வு செய்யும் போது அதன் ஸ்கோவைல் ஹீட் யூனிட் 5000 வரைதான் இருந்தது. ஆனால் இந்த கரோலீனா ரீப்பர் மிளகாய் 15 ஆயிரத்தையும் தாண்டியிருந்தது. இந்த மிளகாயை நாம் வாயிலேயே வைக்க முடியாத அளவிற்கு கார தன்மை கொண்டதாக இருக்கிறது.

இது எந்த அளவிற்கு சாப்பிடுவதற்கு ஆபத்தானது என்றால் கடந்த 2018ம்ஆண்டு நடந்த உணவு போட்டியில் பங்கு கொண்ட இந்த நபர் அளவிற்கு அதிகமாக இந்த கரோலினா ரீப்பர் மிளகாயை சாப்பிட்டதால் அவருக்கு தீவிரமான தலைவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பூட் ஜோலிக்கா

இந்த கரோலீனா ரீப்பருக்கு முன்பு அதிக கார தன்மை கொண்ட மிளகாயாக இருந்தது இந்தியாவைச் சேர்ந்த பூட் ஜோலிக்கா என்ற ரக மிளகாய் தான். இதன் சாதனையை தான் கரோலீனா ரீப்பர் ரக மிளகாய் முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.

இந்த பூட் ஜோலிக்கா என்ற மிளகாய் கடந்த 2007ல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இது மற்ற மிளகாயை விட 400 மடங்கு அதிக கார தன்மை கொண்டது. இது அசாம், நாகலாந்து, மனிப்பூர் ஆகிய பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்