நேற்று 2,284 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 225,922 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,259 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 25 நபர்களும் நேற்று COVID-19 க்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது, 33,198 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 1,917 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 190,464 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,381 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.




