மகாத்மா காந்தியின் பேத்தி மீது தொடரப்பட்ட பண மோசடி வழக்கு : 7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

Date:

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த மகாத்மா காந்தியின் பேத்தி பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள நிலையில் அவருக்கு தென்னாப்பரிக்க நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த தேசப்பிதா என போற்றப்படுபவர் மகாத்மா காந்தி.
பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகளும் காந்தியின் பேத்தியான ஆஷிஷ் லாதா ராம்கோபின். இவருக்கு வயது 56.

போலி ஆவணங்களை தயாரித்து இந்தியாவிலிருந்து சுங்க வரி இல்லாமல் சரக்கை இறக்குமதி செய்து தருவதாக தொழிலதிபர் தொழிலதிபரிடம் கூறியுள்ளார்.

இதற்காக மகராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து சுமார் 6 மில்லியன் தென் ஆப்பரிக்க ரேண்ட் பெற்று ( இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாய்) வாங்கி பின்னர் ஏமாற்றியுள்ளார் என டர்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மேல்முறையீடு செய்ய முடியாத படி தற்போது 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்