மருமகளை கட்டிபிடித்து கொரோனாவை பரப்பிய கொடூர மாமியார்!

Date:

தனக்கு கொரோனா வந்த நிலையில் தன் மருமகளுக்கும் அதை பரப்பும் நோக்கி மாமியார் மருமகளை கட்டிபிடித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது .

தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சிலா மாவட்டம் நெமிலி குட்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காமரெட்டி என்ற பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் லாரி ஓட்டுநரின் தாயாருக்கு பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி மாமியார், மருமகள் இடையே சண்டை நடந்து வந்துள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போட்டதால் பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமியாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் இருந்தாலும் தனிமைபடுத்தப்பட்டார். குழந்தைகளும் மருமகளும் அவர் இருக்கும் பக்கம் செல்லவே பயந்துள்ளனர்.

இது மாமியாருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் வேண்டுமென்றே தன் மருமகளையும் பேரக்குழந்தைகளையும் கட்டிபிடித்துள்ளார். இதனால் அவர்களுக்கும் கொரோனா பரவியது. அதையே சாக்காக வைத்து மருமகளை மாமியார் வீட்டை விட்டு துரத்திவிட்டார்.

அதன் பின் மருமகள் அவரது சகோதரி வீட்டிற்கு சென்று தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அப்பொழுது கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரி நடத்திய விசாரணையில் தான் அத்தனையும் தெரியவந்தது.

மருமகள் மீது உள்ள கோபத்தில் மாமியாரே மருமகளுக்கும், பேர குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸை பரப்பி விட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்