கல்முனையில் பரிதவித்த யாசகர்களிற்கு உதவிக்கரம்!

Date:

கொரோனா அனர்த்தத்தினால் பயணத்தடை கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள யாசகர்களுக்கு ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கிணங்க உணவு வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிராந்தியத்தில் பொது இடங்களில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள யாசகர்கள் பலர் உணவு இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.திங்கட்கிழமை(31) மாலை செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை அணுகிய யாசகர்கள் உணவின்றி சிரமப்படுவதாக தெரிவித்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கு இணங்க கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான அன்பு முகைடீன் ரோசன்அக்தர் பயணத்தடையினால் நிர்க்கதியான இப்பகுதியிலுள்ள 20 யாசகர்களுக்கு உணவுகளை வழங்கி வைத்தார்.

இந்த மனிதாபிமானப் பணியினை தனது சபை அமர்வில் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...

ஏழைகளை வித்தியாசமாக நடந்த முடியாது: ரூ.225,000 இழப்பீடு வழங்க 3 பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2023 ஆம் ஆண்டில் ஹன்வெல்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்