மாஸ்டர் பட பிரபலத்தின் வீட்டில் 15மாத குழந்தை முதல் 83வயது பாட்டி வரை 14 பேருக்கு கொரோனா!

Date:

இயக்குநர் ரத்னகுமாரின் வீட்டில் 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வைபவ், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் படம் மூலம் இயக்குநரானவர் ரத்னகுமார். அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் படத்திற்கு வசனம் எழுதியவர். அவர் போட்டிருக்கும் ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ரத்னகுமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு என்று தெரிவித்துள்ளார். rathna kumarஅவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளதாவது,

பெரிய கண்டத்தை தாண்டிவிட்டீர்கள். இனி எல்லாம் நல்லதாகத் தான் நடக்கும். உடம்பை பார்த்துக் கொள்ளவும். குடும்பத்தோடு கொரோனா என்றால் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது. நீங்கள் குணமானதே எங்களுக்கு போதும். தைரியமாக இருங்கள் அண்ணா என தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் இரண்டாம் அலை எப்பொழுது தான் ஓயுமோ என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இரண்டாம் அலையில் திரையுலகை சேர்ந்த சிலர் உயிரிழந்துவிட்டனர். மேலும் சில பிரபலங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடுகிறார்கள்.

சில பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். அதில் சிலர், தங்களின் கொரோனா போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுள்ளனர்.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு திரையுலக பிரபலங்கள் பலர் மக்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்