நீர்வீழ்ச்சியில் போட்டோ ஷூட் நடத்திய போது சுழலில் சிக்கி 3 இளைஞர்கள் பலி!

Date:

விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தீகலவலசை நீர்வீழ்ச்சியில் போட்டோஷூட் நடத்திய இளைஞர்கள் மூன்று பேர் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாடேரு கிராமத்தை சேர்ந்த நிரஞ்சன்,வினோத்குமார், நாகேந்திர குமார் ஆகியோர் தீகலவலசை நீர்வீழ்ச்சிக்கு சென்று மகிழ்ச்சியுடன் போட்டோஷூட் நடத்தி கொண்டனர்.

தண்ணீருக்குள் இறங்கி போட்டோ ஷூட் நடத்திய போது இளைஞர்கள் மூன்று பேரும் அங்குள்ள சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். மூன்று பேரின் ஆடைகளும் நீர்வீழ்ச்சியின் அருகில் இருப்பதை பார்த்த கிராமத்தினர் அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததை உறுதி செய்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீச்சல் வீரர்கள் உதவியுடன் 3 பேரின் உடல்களையும் தேடி வருகின்றனர். போட்டோஷூட் நடத்தும் போது நீரில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருமண ஆசைகாட்டி தொழிலதிபரிடம ரூ.9 கோடி மோசடி: பிரபல நடிகை மீது வழக்கு!

திருமண ஆசை காட்​டி, ரூ.9.35 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை...

ரிஷாட் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வில்பத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

ஈரானின் சிவப்பு கோடுகளை அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தியுள்ளது!

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தனது சமீபத்திய பாகிஸ்தான் தூதரகப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்