நாய்களிடையே பரவும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தாவியது; ஆபத்து இல்லை என ஆய்வாளர்கள் தகவல்!

Date:

நாய்கள் மத்தியில் பரவக்கூடிய கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நெருக்கடி உலகையே அச்சுறுத்தி வருகிறது. SARS-CoV2 எனப்படும் கொரோனா வைராஸால் கோவிட்-19 நோய் பரவுகிறது. இந்த வகை கொரோனா வைரஸ் போக வேறு சில கொரோனா வைரஸ்களும் உள்ளன. அவற்றால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை என்கின்றனர் வல்லுநர்கள்.

இந்நிலையில், நாய்களிடையே பரவக்கூடிய கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவத் தொடங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு நிமோனியா ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேட்பதற்கு ஆபத்தான வைரஸ் போல தெரிந்தாலும், உண்மையிலேயே இந்த கொரோனாவால் ஆபத்து இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். மலேசியாவில் உள்ள சராவக் பகுதியில், இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாய்களிடையே பரவும் கொரோனா வைரஸ் பற்றி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்களுக்கு தெரியும். ஆனால், இவை மனிதர்களுக்கு பரவாமல் இருந்ததால் பேசுபொருளாகவில்லை. இந்நிலையில், தற்போது மனிதர்களுக்கு பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இதனால் ஆபத்து இல்லை என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்