ரஞ்சிதாவிற்கு புதிய பெயர் சூட்டிய நித்தியானந்தா: எல்லை மீறும் குசும்பு!

Date:

நடிகை ரஞ்சிதாவிற்கு புதிய பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் கைலாசாவிலுள்ள சாமியார் நித்தியானந்தா.

நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் படுக்கை அறையில் ஒன்றாக இருந்த வீடியோ சில வருடங்களின் முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னணி நடிகர்களின் படங்களை விட நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா வீடியோ வெளியான அனைத்து மொழிகளிலும் செம ஹிட் அடித்தது.

நடிகைகள் சாமியார் வசம் தஞ்சமடைவது ஒன்றும் புதிதான விஷயமில்லை. ரஞ்சிதாவும் அப்படித்தான்.

அந்த மாதிரி படங்கள் வந்தால் சினிமாவில் நடிகைகளை கண்டு கொள்ள மாட்டார்கள். நித்தியானந்தா வீடியோவிற்கு பின்னர் மானம், மரியாதை, உழைப்பு எல்லாவற்றையும் இழந்த ரஞ்சிதா, கடைசியில் நித்தியானந்தா வசமே தஞ்சமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து நித்தியானந்தாவின் மடங்களில் உயர்பதவியில் இருந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நித்தியானந்தா மடங்களில் இளம் பெண்கள் பலரும் அந்த மாதிரி தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் எனவும், அதற்கு ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா இருவரும் உடந்தை எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதன்பிறகு நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டிற்குச் சென்றது எல்லாம் வேற கதை. இருந்தாலும் இந்தியாவில் உள்ள நித்யானந்தாவின் மடங்களை ரஞ்சிதா கவனித்து வருகிறார். மேலும் ரஞ்சிதா மீது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

தற்போது ரஞ்சிதாவுக்கு உயர் பதவி கொடுத்து புதிய பெயரையும் கொடுத்துள்ளாராம் நித்தியானந்தா. அந்த வகையில் இனி ரஞ்சிதாவை, ‘மா ஆனந்தமயி’ என்று தான் அழைக்க வேண்டுமாம்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேரறிவாளன் வழக்கறிஞராகினார்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பேரறிவாளன்,...

அர்ச்சுனா 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம்...

ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்