என்னால் இனியும் முடியுமா, உடல்நிலை ஒத்துழைக்குமா?: ஃபீல் பண்ண ரஜினி!

Date:

அண்ணாத்த படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது படக்குழுவினர் மத்தியில் பேசிய ரஜினி தன் உடல்நிலையை நினைத்து ஃபீல் செய்திருக்கிறார். அதை பார்த்த படக்குழுவுக்கும் அழுகை வந்திருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் துவங்கும் முன்பே படப்பிடிப்பை துவங்கினார்கள். கொரோனா பிரச்சனை ஏற்பட்டதும் பல மாதங்கள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனர்.

இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பை துவங்கினார்கள். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினிக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டு ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

கண் கலங்கிய ரஜினி, பதறிய நண்பர்கள்: நடந்தது என்ன?
அதன் பிறகு வீடு திரும்பி ஓய்வு எடுத்த ரஜினி, அண்ணாத்த படமே தன் கடைசி படமாக இருந்துவிடுமோ என்று பயமாக இருப்பதாக தன் நண்பர்களிடம் கூறி கண் கலங்கியிருக்கிறார். உடல்நலம் தேறிய பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

முதலில் சென்னையில் சில காட்சிகளை படமாக்கிவிட்டு மீண்டும் ஹைதராபாத்துக்கே சென்றது படக்குழு. ஏப்ரல் 9ம் தேதியில் இருந்து தொடர்ந்து 32 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. அவர் தொடர்பான காட்சிகளை எல்லாம் படமாக்கிவிட்டனர்.

கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் மத்தியில் பேசியிருக்கிறார் ரஜினி. அப்பொழுது அவர் தன் ஆசை மற்றும் பயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அண்ணாத்த தவிர்த்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் என் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்குமா, தொடர்ந்து நடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. அண்ணாத்த என் கெரியரின் முக்கியமான படம். அந்த ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று கவலையில் இருந்தேன். படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்தது என்று கூறி ஃபீல் செய்திருக்கிறார் ரஜினி.

அண்ணாத்த படத்தை வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

தஞ்சையில் காவல் நிலைய விசாரணைக்குப் பின் உதயநிதி விடுவிப்பு

‘இரட்டை அர்த்த’ பேச்சு விவகாரத்தில் கைதான சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...

மொட்டு செயலாளரின் மிரட்டலை சிஐடி விசாரிக்கும்

பொலிஸ் மா அதிபர் (IGP) குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)...

ஈரான் போரின் போது அமெரிக்கா தனது நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் ‘ஏறக்குறைய அனைத்தையும்’ பயன்படுத்தியுள்ளது

ஈரானுடனான தனது ஐந்தாண்டுப் போரின் போது, ​​அமெரிக்க இராணுவம் தனது கையிருப்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்