மருத்துவர்கள்,மருத்துவ ஊழியர்கள் குறித்து அரசுக்கு அக்கறை இல்லை;உயர் நீதிமன்றம் காட்டம்!

Date:

கொரோனாவால் மருத்துவர்களே உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், மருத்துவர்களை பாதுகாப்பதில் மகாராஷ்டிர அரசு அக்கறை காட்டுவதில்லை என
மும்பை உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும், மருத்துவர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் தகவல் வழங்கும்படி மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மாநில அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையின்போது, “ஒரு பக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு வழக்கறிஞரால் சரிபார்க்கப்படாத பிரமாண பத்திரங்கள் இனி ஏற்கப்படாது.

இது மிகவும் மோசமான நடவடிக்கை. மருத்துவர்களை பாதுகாக்க அரசு தீவிர அக்கறை காட்டவில்லை என தெரிகிறது. ஆனால், மருத்துவர்கள் முழு உழைப்பையும் வழங்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அடுத்த வாரத்துக்குள் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி மாநில சுகாதாரத் துறை துணைச் செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்