டிப்பர் வழிமறிக்கப்பட்டு வெட்டி வீழ்த்தப்பட்ட சாரதி: வவுனியாவில் நடுவீதியில் கொடூரம்!

Date:

வவுனியா சோயா வீதிக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாண்டிக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சோயா வீதிக்கு அண்மையில் வழிமறித்த இருவர் அதன் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை அவதானித்த அந்த பகுதியில் நின்றவர்கள், குரல் எழுப்பியபடி உதவிக்கு ஓடிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் தமது ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த சாரதி அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் திருநாவற்குளம் மைதானத்தில் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. ஒருவர் மீது குழுவொன்று கொடூர தாக்குதல் நடத்தியது. அந்த வீடியோ வெளியாகியிருந்தது.

தாக்குதலாளிகள் கைது செய்யப்படவில்லையென மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில், வவுனியா எம்.பி திலீபன் தலையிட்டதையடுத்து, பொலிசார் சிலரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே, இன்றைய தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்