பொலிஸ் நிலையத்தில் மனைவியின் முகத்தில் அசிட் வீசிய கணவன்!

Date:

பொலிஸ் நிலையத்தில் கணவரின் அசிட் தாக்கிதலால் கடுமையான காயங்களுக்கு ஆளான பெண்ணொருவர் காலி-கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் நேற்று (21) காலை காலியில் உள்ள உடுகம பொலிஸ் நிலையத்தில் அசிட் தாக்குதலை நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.

தம்பதியினரிடையேயான ஏற்பட்ட குடும்ப தகராறு குறித்து விசாரிக்க பொலிஸார் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர். அங்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனைவியின் முகத்தில் திடீரென அசிட் வீசினார்.

அசிட் தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்தார்.

சந்தேகநபர் உடுகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் 28 வயதுடையவர். சந்தேகநபரான கணவர் 32 வயதுடையவர்.

spot_imgspot_img

More like this
Related

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்