ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவன சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி

Date:

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக பெரும் சவாலாக இருக்கும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன.

இந்தியாவிலிருந்த தரப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும்.

உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபைஸர், மொடர்னா, ஸ்புட்னிக் 5 போன்ற இன்னும் பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே.

இந்நிலையில், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் மட்டுமே ஒரே டோஸாக வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா, அவசர கால பயன்பாடு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது. வரும் மார்ச் இறுதிக்குள் தங்களின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை 2 கோடி பேருக்கு விநியோகிக்க முடியும் என ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதியளித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கர்களுக்கு இது நற்செய்தி. கொரோனா நெருக்கடி முடிவு காண முற்படும் நம் முயற்சிகளுக்கு இது ஊக்கமளிக்கும் செய்தி எனத் தெரிவித்துள்ளார்.

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி பரிசோதனையில் கொரோனா தடுப்பில் 85.9% பலனளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பீட்டளவில் அமெரிக்காவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபைஸர், மொடர்னா தடுப்பூசிகள் 95% அளவுக்கு பலனளிப்பதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்