தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் கருத்தரங்கு!

Date:

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றுள்ளது.

நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் மரபுரிமை அரசியல் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைச் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி பரமு புஸ்பரட்ணம் உரையாற்றினார்.

வனவள அரசியல் என்ற தலைப்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், ஜெனீவா அரசியல் என்ற தலைப்பில் நிலாந்தனும் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து யாழ் மறைமாவட்டக் குரு முதல்வர் வண. பிதா. யோசப்தாஸ் ஜெபரட்ணம் சிறப்புரை ஆற்றினார்.

மரபியலாளர் ஜீ.ஜெயதீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கு நிகழ்ச்சி கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்புச் சுகாதார நடைமுறைகளைப் பேணி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை குறிவைக்கும் பொலிசார்

குறைபாடுள்ள அல்லது சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும்,...

ஜனக பெரேரா கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

அனுராதபுரத்தில் 2008-ஆம் ஆண்டு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற மேஜர்...

2000 பேர் பலி: பதற வைக்கும் வெனிசுலா நிலவரம்!

கிட்டத்தட்ட 2,000 பேரைக் கொன்ற இரண்டு பேரழிவுகரமான நிலநடுக்கங்களுக்குப் பிறகு, வெனிசுலாவில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்