ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவன சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி

Date:

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக பெரும் சவாலாக இருக்கும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன.

இந்தியாவிலிருந்த தரப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும்.

உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபைஸர், மொடர்னா, ஸ்புட்னிக் 5 போன்ற இன்னும் பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே.

இந்நிலையில், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் மட்டுமே ஒரே டோஸாக வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா, அவசர கால பயன்பாடு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது. வரும் மார்ச் இறுதிக்குள் தங்களின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை 2 கோடி பேருக்கு விநியோகிக்க முடியும் என ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதியளித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கர்களுக்கு இது நற்செய்தி. கொரோனா நெருக்கடி முடிவு காண முற்படும் நம் முயற்சிகளுக்கு இது ஊக்கமளிக்கும் செய்தி எனத் தெரிவித்துள்ளார்.

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி பரிசோதனையில் கொரோனா தடுப்பில் 85.9% பலனளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பீட்டளவில் அமெரிக்காவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபைஸர், மொடர்னா தடுப்பூசிகள் 95% அளவுக்கு பலனளிப்பதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்