இன்று இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர்!

Date:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (23) இலங்கைக்கு வருகிறார்.

இன்று மாலை 4.15 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்பார், அதே நேரத்தில் அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்படும்.

இரு பிரதமர்களுக்கிடையில் அதிகாரப்பூர்வ கலந்துரையாடல் மாலை 6 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பல பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்விற்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் இருவரும் தலைமை தாங்குவார்கள் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாலை 6.30 மணிக்கு கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் நாளை காலை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை சந்திப்பார்.

பிரதமர் இம்ரான் கான் வணிக மற்றும் முதலீட்டு மன்றம் மற்றும் விளையாட்டு இராஜதந்திர முயற்சி உட்பட பல உயர் மட்ட சந்திப்புக்களை நாளை மேற்கொள்வார்.

பாகிஸ்தான் பிரதமருடன் வணிக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவும் வருகை தரவுள்ளது. இது பாகிஸ்தானில் வணிகத் தலைவர்களைக் கொண்டிருக்கும், ஜவுளி மற்றும் ஆடை, மருந்துகள், வேளாண் உணவு பொருட்கள், விளையாட்டு பொருட்கள், கற்கள் மற்றும் நகைகள், வாகன பாகங்கள், ஐ.சி.டி, கட்டுமானப் பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் தயாரிப்பு துறை சார்ந்தவர்கள் அந்த குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்..

பிரதமர் இம்ரான் கானுடன் வெளியுறவு அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வர்த்தகத்துறை ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளியுறவுத்துறை செயலாளர் சோஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசு மூத்த அதிகாரிகளும் வருகை தருகிறார்கள்.

அவர் தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு நாளை நாட்டை விட்டு வெளியேற உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்!

ஜனாதிபதி சட்டத்தரணிகள் (PC) நியமனம் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜனாதிபதி...

நாடு திரும்பிய பணிப்பெண்ணுக்கு எமனான டிப்பர்

டிப்பர் வாகனம் மோதியதில் தாய் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு மகன்களும் படுகாயமடைந்ததாக...

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்