அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அடுத்த 5 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ஜோ பைடன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகை முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி, ஜனாதிபதி பைடன், அவரது மனைவி ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டக் எம்ஹாஃப் ஆகியோர் சில நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.



